Tuesday 30th of April 2024 08:58:55 PM GMT

LANGUAGE - TAMIL
.
எஸ்.பி.பி.க்கா திருவண்ணாமலையில் மோடச தீபம் ஏற்றிய இசைஞானி இளையராஜா!

எஸ்.பி.பி.க்கா திருவண்ணாமலையில் மோடச தீபம் ஏற்றிய இசைஞானி இளையராஜா!


மறைந்த இந்திய பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆத்ம சாந்தி அடைய வேண்டி திருவண்ணாமலை திருத்தலத்தில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்துள்ளார் இசைஞானி இளையராஜா.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அண்மையில் கொடிய கொரோனாவின் பிடியில் மீண்டிருந்த போதிலும் அதனால் ஏற்பட்ட உடல்நலக் குறைவுக்காக சிகிச்சை தொடர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்திருந்தார்.

அவரது புகழுடல் நேற்றையதினம் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திருவண்ணாமலை திருத்தலத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார் இசைஞானி இளையராஜா.

திரையுலக தொடர்புகள் கடந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இசைஞானி இளையராஜாவும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE